கோயம்புத்தூர் வெடிப்பு, உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பால் ஈர்க்கப்பட்டது

கோயம்புத்தூர் வெடிப்பு, உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பால் ஈர்க்கப்பட்டது

தமிழகம் – கோயம்புத்தூர் சிற்றூந்து வெடிப்பு சம்பவம், இலங்கையின் உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பால் ஈர்க்கப்பட்ட சம்பவம் என்று இந்திய தேசிய புலனாய்வு பிரிவான என்ஐஏ (NIA) தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஜமீஷா முபின், தனது தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியதாரி சஹ்ரான் ஹாஷிம் செய்ததைப் போன்ற பிரியாவிடை காணொளியாக வெளியிட்டார்.

எனினும், முபின் தான் ஒரு ஷஹீத் என்ற தியாகியாக விரும்புவதாக கூறியிருந்தார்.

அதற்காக தொகுதி காணொளியை வெளியிட அவர் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது. எனினும், அது நடக்கவில்லை என்றும் என்ஐஏ குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த ஒக்டோபரில் கோவை சங்கமேஸ்வரர் கோவில் முன்னால் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஈடுபட்டவர்கள், இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாசிம் என்பவரால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை என்ஐஏ கண்டறிந்துள்ளது.

இதுவரை குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 12 பேர் ஹாஷிமினால் ஈர்க்கப்பட்டு தீவிரமயமாக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இவர்களின் செயற்பாட்டில் வெளியாரின் தொடர்புகள் குறித்த தகவல்கள் இன்னும் ஏஎன்ஐயால் கண்டறியப்படவில்லை என்று தி ஹிந்து கூறுகிறது.

CATEGORIES
Share This