ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கு அதிகாரம் இல்லை ஆனால் கோட்டாவிற்கு உண்டு

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கு அதிகாரம் இல்லை ஆனால் கோட்டாவிற்கு உண்டு

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை இந்த வருடம் நடத்துவதற்கான அதிகாரம் ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 40 ஆவது சரத்தின்படி, ஐந்தாண்டுகளின் முழுமையான பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு புதிய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 40 சரத்தின் உப பிரிவுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே இரண்டாவது முறையாக போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த வருடம் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இந்ததாகவும் ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் அவர் சுட்டிகக்hட்டியுள்ளார்.

எனவே, அடுத்த வருடம் அதாவது 2024 ஆம் ஆண்டு நவம்பருக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் கிடைக்கும் என்றும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This