இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து!

இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான்கான் விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு நீதிமன்றம் விலக்கு அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதற்கிடையே இவ்வழக்கு நேற்று இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது இம்ரான்கானுக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். அவரை கைது செய்து வருகிற 29ஆம் திகதிக்குள் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் லாகூரில் இன்று தேர்தல் பேரணி இம்ரான்கான் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இம்ரான் கானை இன்று கைது செய்ய இஸ்லாமாபாத் பொலிசார் ஹெலிகாப்டர் மூலம் லாகூரில் உள்ள அவரது வீடு அருகே உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சிறப்பு பொலிஸ் படையினர் இம்ரான்கான் வீடு இருக்கும் சாமர் பார்சி பகுதிக்கு சென்று அவரை கைது செய்ய திட்டமிட்டனர். இந்நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் பிடிவாரண்ட்டை ரத்து செய்து இம்ரான் கானை வருகிற 16ஆம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This