அமெரிக்க இராணுவத்திற்கு ஆதரவாக சவேந்திர சில்வா; தரையிறங்க தயாரான இந்திய இராணுவம்!

அமெரிக்க இராணுவத்திற்கு ஆதரவாக சவேந்திர சில்வா; தரையிறங்க தயாரான இந்திய இராணுவம்!

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இருந்தது அமெரிக்காவே என பிரித்தானியாவிலிருக்கும் கலாநிதி பிரபாகரன் (இராணுவ ஆய்வாளர்) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்க்கு வழங்கிய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இருந்தது அமெரிக்கா. அமெரிக்காவிற்கு ஆதரவாக தான் சவேந்திர சில்வா இருந்திருக்கிறார்.

அவரின் நடவடிக்கைகளை பார்த்தால் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு தான் அவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அவரும் இராணுவத்தை களமிறக்கவில்லை. அதேநேரம் அமெரிக்கா State Department பகிரங்கமாக அறிவித்துள்ளது, நாம் சிறிலங்கா இராணுவத்தின் ஒவ்வொரு நகர்வையும் இரவு பகலாக அவதானிக்கிறோம் என்று.

எனினும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அமெரிக்கா சார்பானது என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This