டெல்லியில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

டெல்லியில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?


டெல்லியில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி நகரின் நீர் தேவையை யமுனை நதி 40 சதவீதம் தீர்த்து வைக்கிறது. டெல்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில் இருந்து யமுனை நதி நீரை சுத்திகரித்து டெல்லிக்கு கொண்டு வருகிறார்கள்.

மீதமுள்ள நீரை கங்கையில் இருந்து எடுக்கிறார்கள். டெல்லி நகருக்கு ஒரு நாளைக்கு 125 கோடி கேலன் நீர் தேவைப்படுகிறது. இதில் 95 கோடி கேலன் நீரை டெல்லி குடிநீர்வாரியம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது.

வழக்கமாக கோடைகாலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் அது அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மழை குறைந்ததால் யமுனையில் நீர் அளவு குறைந்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு கோடையில் நீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அரியானா மாநிலத்தில் யமுனையில் அதிகப்படியான மணலை அள்ளியதால்தான் நீர் வற்றிப்போனதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இருக்கிற நீரும் இரசாயனம் கலந்திருப்பதால் அதை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது கடினமான காரியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This