புளோரிடாவை அச்சுறுத்தும் ‘சதை உண்ணும்’ பக்டீரியா: 13 பேர் உயிரிழப்பு

புளோரிடாவை அச்சுறுத்தும் ‘சதை உண்ணும்’ பக்டீரியா: 13 பேர் உயிரிழப்பு

இரண்டு பெரிய சூறாவளியால் பாதிக்கப்பட்ட பின்னர் தெற்கு அமெரிக்க மாநிலமான புளோரிடா மீண்டு வரும் வேளையில், அரிதான ஆனால் கொடிய ‘சதை உண்ணும்’ பக்டீரியா தொற்றினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

புளோரிடா மாநிலத்தில் விப்ரியோ வல்னிஃபிகஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 74 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு முழுவதும் 46 தொற்றாளர்களும், 11 உயிரழப்புகளுமே பதிவாகியிருந்ததாகவும், இதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

செப்டம்பர் மாதம் ஏற்பட்ட ஹெலீன் சூறாவளி மற்றும் இந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட மில்டன் சூறாவளியால் புளோரிடா மாநிலம் பேரழிவை சந்தித்திருந்தது.

சூறாவளியின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் உப்புநீருடன் நன்னீர் கலந்தது. வழிவகுத்தது, இது விப்ரியோ வல்னிஃபிகஸ் தொற்று பரவ ஏதுவாக அமைந்தது.

விப்ரியோ வல்னிஃபிகஸ் என்றால் என்ன?

விப்ரியோ வல்னிஃபிகஸ் என்பது சூடான, உவர் கடல் நீரில் வாழும் ஒரு பாக்டீரியா ஆகும். இது திறந்த காயங்கள் மூலம் அல்லது உட்கொள்ளும் போது மக்களை பாதிக்கிறது.

அதிக மழைப்பொழிவு பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது, குறிப்பாக கடலோரப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விப்ரியோ வல்னிஃபிகஸ் நோய்த்தொற்றுகள் அரிதானவை, எனினும், ஆபத்தானவை, பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர்.

நோய்த்தொற்று ஏற்பட்டவுடன், விப்ரியோ வல்னிஃபிகஸ் தோல் மற்றும் மென்மையான திசுக்களின் சிதைவைத் தூண்டும்.

நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள், இந்த தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) தரவுகளின்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 முதல் 200 விப்ரியோ வல்னிஃபிகஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விப்ரியோ வல்னிஃபிகஸ் பாக்டீரியா அறிகுறிகள்

காய்ச்சல், தோல் சிவத்தல் மற்றும் கடுமையான திசு சேதம் என்பன விப்ரியோ வல்னிஃபிகஸின் அறிகுறிகளாகும். இது வயிற்றுப் பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தியுடன் கூடிய நீர் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும்.

குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கொப்புளங்கள், தோல் புண்கள் போன்றவை மற்ற அறிகுறிகளாகும்.

விப்ரியோ வல்னிஃபிகஸிக்கான சிகிச்சை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த அறிகுறிகளைக் காட்டுபவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விப்ரியோ வல்னிஃபிகஸ் தொற்றுநோயைத் தடுப்பது எப்படி

வெள்ள நீரில் தோல் வெளிப்படுவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். காயங்களை பாதுகாப்பாக கட்டுப்போட்டு வைத்திருக்க வேண்டும்.

“வெள்ளநீர் இருக்கும்போது, விப்ரியோ வல்னிஃபிகஸ் போன்ற நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது, இது உயிருக்கு ஆபத்தானது” என்று புளோரிடா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This