முதலாளிமார் சம்மேளனத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

முதலாளிமார் சம்மேளனத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, இறுதி நேரத்தில் வருகை தராத முதலாளிமார் சம்மேளனத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று வேதன நிர்ணய சபையில் இடம்பெறவிருந்தது.

இந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

முதலாளிமார் சம்மேளனத்தின் அசமந்த போக்கே இதற்கு காரணம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் உரிய தீர்வு கிடைக்காவிடின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் என செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This