இலங்கையில் கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 24 பேர் விடுதலை!

இலங்கையில் கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 24 பேர் விடுதலை!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு படகோட்டிக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 25 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This