முல்லைத்தீவில் மீண்டும் கன மழை; குளங்களின் வான் கதவுகள் திறப்பு – தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம்

முல்லைத்தீவில் மீண்டும் கன மழை; குளங்களின் வான் கதவுகள் திறப்பு – தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில் தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்றுமுன்தினம் முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில் நீர் வரத்தைக் கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் நேற்றுக் காலை முதல் ஆறு அங்குல அளவில் திறந்துவிடப்பட்டிருந்தன. நீர் வரத்து அதிகரித்த நிலையில் இன்று நான்கு வான்கதவுகளும் ஒரு அடி மூன்று அங்குல அளவில் திறந்துவிடப்பட்டுள்ளன.

இதேபோன்று தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே குளங்கள் நிறைந்து காணப்படும் நிலையில் குளங்கள் பல வான் பாய்கின்றன.

இதேவேளை, இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலைமையில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற காரணத்தால் ஏற்கனவே குளங்கள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்ற நிலைமையில் சகல குளங்களிலும் வான் பாய்கின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது. எனவே, மழை தொடர்ச்சியாகப் பெய்தால் இன்னும் பாதிப்புகள் அதிகரிக்கலாம். எனவே, தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This