காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை!

காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை!

யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73,000 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று (06) ஆரம்பித்து வைத்தபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

205 வருடகால வரலாற்றை கொண்ட யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான 2.5 பர்சஸ் காணி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும், விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படவில்லை எனவும் பாடசாலையின் அதிபர் இதன்போது கூறினார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

ஏனைய உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பில் எழுத்துமூலம் கோரிக்கைகளை சமர்பிக்குமாறும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் எதிர்வரும் ஆண்டுக்குள் இலங்கையில் அனைத்து காணி அற்றவர்களுக்கு காணிகளும் வீடுகளும் வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் படிப்படியாக பொதுமக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் எனவும் வனவிலங்கு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் காணியற்ற மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This